Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 4 போலீசார் உயிரிழந்தனர். வருகிற 30ந் தேதி முதல் ஐந்து கட்டங்களாக அம்மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் லதேஹர் மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது நக்சலைட்டுகள் திடீர் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்த நிலையில், உதவி ஆய்வாளர் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 2 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் மேலும் ஒரு போலீஸ்காரர் பலியானார்.